சில நேரங்களில் எங்கேயோ நாம் கேட்ட கதைகள், சம்பவங்கள், விஷயங்களைப் படிக்கும்போது 'ச்சே... இதை முன்கூட்டியே படிச்சிருந்தா, என் விஷயத்துல கொஞ்சம் நிதானமா நடந்திருப்பேனே' என்று நினைக்கத் தோன்றும். அப்படி நம்மை நாமே செதுக்கும் உளியாக சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இது.
ஜூலி-சாலமன் இருவரின் திருமணத்தன்று, புதிதாகத் தொடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீட்டிய ஜூலியின் அம்மா, ''நீ சந்தோஷமா இருக்கிறப்பல்லாம் உன்னால எவ்வளவு பணம் போட முடியுமோ போட்டு வை. அப்படியே என்ன காரணத்துக்காக பணம் போட்டியோ... அதை, பாஸ்புக்குல இருக்கற ரிமார்க்ஸ் ஏரியாவுல எழுதி வை" என்று சொன்னார். மகளின் திருமண சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 2,000 ரூபாயையும் அதில் டெபாஸிட் செய்திருந்தார்.
''நல்ல ஐடியாவா இருக்கே... நாம ரெண்டு பேருமே இந்த அக்கவுன்ட்டில் பணம் போடலாம்" என்று தானும் உற்சாகமாகிவிட்டார் சாலமன்.
'ஜனவரி 800 ரூபாய் - ஜூலியின் பிறந்த நாள். பிப்ரவரி 1,000 ரூபாய் - சாலமனுக்கு புரமோஷன். மார்ச் 400 ரூபாய் - கொடைக்கானல் ஜாலி ட்ரிப் போன சந்தோஷம். ஏப்ரல் 1,000 ரூபாய் - சாலமனுக்கு பிறந்த நாள். மே 3,000 ரூபாய் - நான் அப்பாவாகப் போற இரட்டிப்பு சந்தோஷம்'
- இப்படி நான்கு ஆண்டுகள் சந்தோஷமாகக் கரைந்து கொண்டிருந்த சூழலில், திடீர் சூறாவளி! காரணம் இல்லாமலே அடிக்கடி சண்டைகள் வெடிக்க, ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு போன் செய்த ஜூலி, ''இனியும் இவரோட குடும்பம் நடத்த முடியாது. இவரைப் போய் எப்படிம்மா எனக்குக் கட்டி வெச்சீங்க" என்று புலம்பினாள்.
ஆயிரம் சமாதானங்களும் எடுபடாத நிலையில்... ''ஓ.கே... நீ விரும்பின மாதிரி உனக்கு டைவர்ஸ் வாங்கித் தந்துடறேன். அதுக்கு முன்ன நீ ஒண்ணு செய்யணும். உனக்கு கல்யாணத்தன்னிக்கு நான் கொடுத்த பாஸ் புக்குல போட்ட பணத்தை எல்லாம் முதல்ல பேங்க்ல இருந்து எடுத்துடு. உன் கல்யாணச் சுவடா எதுவுமே இருக்கக் கூடாது" என்றாள் அம்மா.
வங்கி க்யூவில் நின்றபடியே மெதுவாக பாஸ் புக்கை புரட்டிய ஜூலி, ஒவ்வொரு டெபாஸிட் பற்றியும் எழுதப்பட்டிருந்த அந்த சந்தோஷ நினைவுகளைப் படித்துக் கொண்டே போக, இமை மீறியது கண்ணீர்! 'எனக்கு இத்தனை சந்தோஷங்களைத் தந்திருக்கிறாரா சாலமன்!' என்று நினைத்தவள், சட்டென்று வங்கியைவிட்டு கிளம்பி ஓடினாள். ''இந்த பாஸ்புக்ல இருக்கிற பணத்தை செலவழிச்ச பிறகு நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்" என்று சாலமனிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள்.
மறுநாள்... கையில் பாஸ்புக்குடன் வாசலில் நின்றான் சாலமன். ஓடி வந்து அதை வாங்கி பார்த்தவள், அப்படியே அவனை இறுகக் கட்டிக் கொண் டாள்.
பாஸ்புக்கில் இருந்தது - 'டிசம்பர் மாதம் 5,000 ரூபாய்- மனைவியுடனான மோதல் முற்றுப்புள்ளிக்கு வந்த நாள்.
Friday, April 23, 2010
Saturday, April 10, 2010
இப்படியும் பலர் (காதலா காமமா)
சென்ற பதிப்பின் தொடர்சிங்க இது. இது என்ன பேய் விடியற்காலை காலை நேரத்தில் வருகிறது என எனக்கு ஒரு சந்தேகம். அன்று காலை வாக்கிங் செல்ல நீண்ட நாட்களுக்கு பிறகு எழுந்தேன்.(பேய் பார்க்க-அதுவும் பெண் பேய் வேறு :)). எனது சந்தேகம் சரி. கதவை திறந்தால் என்னை கண்டதும் ஒரு உருவம் அருகில் இருந்த காருக்கு பின் பதுங்கியது. நான் கார் அருகில் சென்றேன். பேய் அல்ல பெண்தான். என்னை பார்த்ததும் மிக அதிர்ச்சி முகத்தில் தெரிந்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தாள். தெரு திரும்புகையில் எங்கள் தெருவுக்கு வழக்கமாக வரும் பூக்காரம்மா அந்த வீட்டை பார்த்துகொண்டே வருவதை பார்த்து ஏதோ மூளையில் பொறிதட்டியது. (உங்களுக்கு ஏது அது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது).பூக்கரம்மாவை அழைத்தேன். அவளுக்கு பயம் முகத்தில் தெரிந்தது. யார் அந்த பெண் என்று சற்று அதிகார தொனியில் கேட்டவுடன் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தாள். ஹிண்ட்ஸ் டெவலபிங் மாதிரி சொல்லிடறேன்.
அந்த பெண் மதுரை. பக்கத்துக்கு வீடுகாரனும் மதுரை. அருகருகே வீடு. காதலித்தார்கள். பெண் வசதி குறைவு. சென்னைக்கு அழைத்து வந்து வேலை வாங்கி தந்து இருக்கிறான். பெண்ணுக்கும் அவள் தாய்க்கும் சென்னையில் வீடு பார்த்து தந்திருக்கிறான். திருமணம் தவிர மற்ற எல்லாம் (புரிந்து கொள்ளவும்) முடிந்துவிட்டது. ஆனால் வேறு ஒரு பெண்ணை வசதி அதிகம் என்று திருமணம் செய்துகொண்டு அந்த பெண்ணுக்கு தெரியாமல் குடிவந்துவிட்டான். அது தெரிந்து அவன் வீட்டருகே வந்த அவளை நண்பி என சொல்லி மனைவியை விட்டு காபி கொடுத்து அனுப்பி இருக்கிறன் ஒரு நாள். அவள் போகும்போது அழுதுகொண்டே போவதை பார்த்த பூக்காரி நடந்ததை அவளிடம் இருந்து தெரிந்து கொண்டாள். அவள் குறி சொல்லுபவள். மந்திரித்து விபுதி கொடுக்கிறேன். செவ்வாய் வெள்ளி கிழமையில் அவன் வீட்டு வாசலில் போட்டால் அவன் மீண்டும் உன்னிடம் வந்து விடுவான் எனகூறி இருக்கிறாள். இது தான் நடந்தது.
காதலிப்பது தவறில்லை. எதிலும் எல்லை மீறாமல் ( தவறு என்று சொன்னால் குஷ்பு சண்டைக்கு வருவார்) நடந்திருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. மணமாகிவிட்டது என்று தெரிந்தும் வேறு எதுவும் செய்வதை விட்டு இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் கெடுக்க நினைத்த அந்த பெண்ணையும் , இரு பெண்களின் வாழ்வில் (இரு பெண்கள் மட்டும் தான? ) விளையாடி கொண்டிருக்கும் அந்த சாப்ட்வேர் இஞ்சினியரையும் எப்படி புகழ்வது எனப்புரியாமல் எங்கள் தெரு மக்கள். (பின்குறிப்பு - பூக்காரியை எச்சரித்து அனுப்பினார்கள்)
அந்த பெண் மதுரை. பக்கத்துக்கு வீடுகாரனும் மதுரை. அருகருகே வீடு. காதலித்தார்கள். பெண் வசதி குறைவு. சென்னைக்கு அழைத்து வந்து வேலை வாங்கி தந்து இருக்கிறான். பெண்ணுக்கும் அவள் தாய்க்கும் சென்னையில் வீடு பார்த்து தந்திருக்கிறான். திருமணம் தவிர மற்ற எல்லாம் (புரிந்து கொள்ளவும்) முடிந்துவிட்டது. ஆனால் வேறு ஒரு பெண்ணை வசதி அதிகம் என்று திருமணம் செய்துகொண்டு அந்த பெண்ணுக்கு தெரியாமல் குடிவந்துவிட்டான். அது தெரிந்து அவன் வீட்டருகே வந்த அவளை நண்பி என சொல்லி மனைவியை விட்டு காபி கொடுத்து அனுப்பி இருக்கிறன் ஒரு நாள். அவள் போகும்போது அழுதுகொண்டே போவதை பார்த்த பூக்காரி நடந்ததை அவளிடம் இருந்து தெரிந்து கொண்டாள். அவள் குறி சொல்லுபவள். மந்திரித்து விபுதி கொடுக்கிறேன். செவ்வாய் வெள்ளி கிழமையில் அவன் வீட்டு வாசலில் போட்டால் அவன் மீண்டும் உன்னிடம் வந்து விடுவான் எனகூறி இருக்கிறாள். இது தான் நடந்தது.
காதலிப்பது தவறில்லை. எதிலும் எல்லை மீறாமல் ( தவறு என்று சொன்னால் குஷ்பு சண்டைக்கு வருவார்) நடந்திருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. மணமாகிவிட்டது என்று தெரிந்தும் வேறு எதுவும் செய்வதை விட்டு இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் கெடுக்க நினைத்த அந்த பெண்ணையும் , இரு பெண்களின் வாழ்வில் (இரு பெண்கள் மட்டும் தான? ) விளையாடி கொண்டிருக்கும் அந்த சாப்ட்வேர் இஞ்சினியரையும் எப்படி புகழ்வது எனப்புரியாமல் எங்கள் தெரு மக்கள். (பின்குறிப்பு - பூக்காரியை எச்சரித்து அனுப்பினார்கள்)
Friday, March 26, 2010
இது அடுத்தாத்து சமாச்சரம்க
எங்கள் தெரு சென்னைல கொஞ்சம் வித்தியாசமான தெரு. எப்படி சொல்லுறேனா காலைல 5 மணி 5.30 மணிக்கெல்லாம் எல்லார் வீட்லயும் வாசல் தெளிச்சு கோலம் போட்டுடுவாங்க. நான் வழக்கம் போல் 6-6.30 கு தான். சென்றவாரமும் ஒரு நாள் அப்படி தான் விடிந்தது எனக்கு. மாடில இருந்து கீழ இறங்கினால் என் மனைவியிடம் ஒரே பரபரப்பு. தெருவில் எல்லா வீட்டு பெண்களும் கூட்டம் போட்டு பேசி கொண்டிருதார்கள். நான் என்னவென்று என் மனைவியை அழைத்து கேட்டேன். என் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் வீட்டிலுள்ள பெண்மணி காலை ஐந்து மணியளவில் கோலம் போட எழுந்துள்ளார். இருளும் பணியும் சூழ்ந்த நேரம் அது. அப்போது என் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டு வாசலில் சுமார் ஐம்பது வயதுள்ள ஒரு பெண்மணி ஏதோ தூவிகொண்டிருபதை பார்த்திருக்கிறார். இவர் பார்த்ததை அந்த பெண் கவனிக்கவில்லை போலும். பின் விறுவிறுவென்று அருகில் உள்ள பஸ் ஸ்டாப் பக்கம் போய் விட்டார் அந்த பெண்மணி. எங்கள் தெரு பெண் பயந்து போய்விட்டார். சற்று வெளிச்சமும் அருகில் உள்ள வீட்டு பெண்கள் எழுந்தவுடன் அவர்களையும் அழைத்து கொண்டு அங்கே சென்று பார்த்துள்ளார். ஒரே விபூதியாக அங்கே தூவபட்டிருந்தது போலும். அனைத்து பெண்களுக்கும் பயம் பற்றிக்கொண்டது. இது தான் விஷயம். நானும் விபுதி கொட்டிருப்பதை பார்த்தேன். நல்ல வேலையாக அந்த வீட்டில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்தார்கள். திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. அவர் சாப்ட்வேர் எஞ்சினியர். பெண் வேலை பார்கவில்லை. பெண் கர்ப்பமாக இருப்பதால் தாய் ஊருக்கு சென்றுள்ளார். அவர் ஊரில் இருந்து வந்தவுடன் மனைவிடம் சொல்லவேண்டாம் எனகூறி நான் அவரிடம் விசயத்தை சொன்னேன். நல்ல வேலையாக அவரிடம் பயம் தெரியவில்லை. மனுஷன் நம்மள போல் இதெல்லாம் நம்பமாட்டார் போலன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டேன். மனைவி ஊரில் இல்லாததால் தனியாக தான் இருந்தார். அடுத்தநாள் காலை அவர் வீடு முழுக்க ஒரே புகை மயம். சாமீ பாடல் ஒலித்து கொண்டிருந்தது. சரிதான் இவரும் மற்ற பெண்கள் போல் பயந்து விட்டார் போல என நினைத்துகொண்டேன். இரவு அலுவலகம் முடிந்து வந்த என்னிடம் என் மனைவி சொன்னார் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீட்டை காலிசெய்யபோவதாக. காலியும் செய்து விட்டார்.மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் எதிர் வீட்டுப்பெண்மணி கோலம் போட எழுந்து வாசல் வரும்போது அதே வீட்டு வாசல் அருகில் ஒரு இளம் பெண் சுமார் இருபத்தி ஐந்து வயது இருக்கும். வெள்ளை நிற சுடிதார் அணிந்து மிக நீளமான கூந்தலுடன். பயந்து விட்டார் எதிர் வீட்டு பெண்மணி. வாளியை கீழே போட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். சற்று நேரம் கழித்து வெளியே எட்டி பார்த்தால் அந்த வெள்ளை நிற சுடிதார் பெண் நடந்து சென்றுகொண்டிருபதை பார்த்துள்ளார்.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வரை ஆறு மணிக்குத்தான் எல்லா வீட்டிலையும் கோலம். என் மனைவி சும்மாவே பயந்த சுபாவம். இந்த விஷயம் கேட்டு அவ்வளவு தான். நல்ல வேலையாக என் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட திருப்பதி குடும்பத்துடன் சென்றிருந்தேன். திரும்ப வந்து பார்த்தால் ........
சாரிங்க. என் பெண் லீவு நாள் கூட கம்ப்யூட்டர் தான என் கூட விளையாட மாட்டியானு திட்டுரா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சீக்கிரம் பாகம் இரண்டுன்னு போடுறேன்.
Thursday, March 11, 2010
முயற்சி
கடைசியாக படித்த ஒரு புத்தகத்தின் தாக்கம்.
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளாக இருந்து வந்தான். யாரிடமும் அவன் பேசுவது இல்லை. ஒரே மரத்தடியில் எப்போதும் அமர்ந்து இருப்பான். ஆனால் பார்பவர்கள் அவனுக்கு பிச்சை போட்டனர். ஒரு நாள் அவன் இறந்து போய் இருந்தான். ஊர் மக்கள் அதே மரத்தடியில் அவனை புதைக்க முடிவு செய்தனர். அந்த இடத்தை தோண்டிய போது அங்கு ஒரு வெண்கல பாத்திரத்தில் நிறைய பொற்காசுகள் இருப்பதை பார்த்தனர். அவன் சும்மா இராமல் அந்த இடத்தை தோண்டி இருந்தால் அவன் அந்த பொற்காசுகளை கண்டு பிடித்து ஒரு பெரியபணக்காரனாக மாறி இருக்கலாம். ஒரே இடத்தில சோம்பேறியாக இருந்ததால் அவன் கடைசிவரை பிச்சைகாரனாக இருந்து விட்டான்.
நம்மில் பலர் அந்த பிச்சைக்காரன் போல் ஒரே இடத்தில இருந்து நம் திறமைகளை சரிவர பயன்படுத்தாமல் கடைசி வரை சாதாரண பணியாளனாக இருந்து விடுகிறோம். வாய்புகளை சரிவர பயன்படுத்தும் ஒருசிலரே பேர் சொல்லும் வகையில் கோடீஸ்வரனகவோ இல்லை சிறந்த தொழில் அதிபராகவோ ஏற்றம் காண்கிறனர். நம்மில் பலர் முயற்சியும் இல்லாமல் வரும் வாய்ப்புகளை பெரும்பாலும் நழுவ விடுகின்றனர். நானும் அந்த பலரில் ஒருவனாக ...
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளாக இருந்து வந்தான். யாரிடமும் அவன் பேசுவது இல்லை. ஒரே மரத்தடியில் எப்போதும் அமர்ந்து இருப்பான். ஆனால் பார்பவர்கள் அவனுக்கு பிச்சை போட்டனர். ஒரு நாள் அவன் இறந்து போய் இருந்தான். ஊர் மக்கள் அதே மரத்தடியில் அவனை புதைக்க முடிவு செய்தனர். அந்த இடத்தை தோண்டிய போது அங்கு ஒரு வெண்கல பாத்திரத்தில் நிறைய பொற்காசுகள் இருப்பதை பார்த்தனர். அவன் சும்மா இராமல் அந்த இடத்தை தோண்டி இருந்தால் அவன் அந்த பொற்காசுகளை கண்டு பிடித்து ஒரு பெரியபணக்காரனாக மாறி இருக்கலாம். ஒரே இடத்தில சோம்பேறியாக இருந்ததால் அவன் கடைசிவரை பிச்சைகாரனாக இருந்து விட்டான்.
நம்மில் பலர் அந்த பிச்சைக்காரன் போல் ஒரே இடத்தில இருந்து நம் திறமைகளை சரிவர பயன்படுத்தாமல் கடைசி வரை சாதாரண பணியாளனாக இருந்து விடுகிறோம். வாய்புகளை சரிவர பயன்படுத்தும் ஒருசிலரே பேர் சொல்லும் வகையில் கோடீஸ்வரனகவோ இல்லை சிறந்த தொழில் அதிபராகவோ ஏற்றம் காண்கிறனர். நம்மில் பலர் முயற்சியும் இல்லாமல் வரும் வாய்ப்புகளை பெரும்பாலும் நழுவ விடுகின்றனர். நானும் அந்த பலரில் ஒருவனாக ...
Subscribe to:
Posts (Atom)
