கடைசியாக படித்த ஒரு புத்தகத்தின் தாக்கம்.
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளாக இருந்து வந்தான். யாரிடமும் அவன் பேசுவது இல்லை. ஒரே மரத்தடியில் எப்போதும் அமர்ந்து இருப்பான். ஆனால் பார்பவர்கள் அவனுக்கு பிச்சை போட்டனர். ஒரு நாள் அவன் இறந்து போய் இருந்தான். ஊர் மக்கள் அதே மரத்தடியில் அவனை புதைக்க முடிவு செய்தனர். அந்த இடத்தை தோண்டிய போது அங்கு ஒரு வெண்கல பாத்திரத்தில் நிறைய பொற்காசுகள் இருப்பதை பார்த்தனர். அவன் சும்மா இராமல் அந்த இடத்தை தோண்டி இருந்தால் அவன் அந்த பொற்காசுகளை கண்டு பிடித்து ஒரு பெரியபணக்காரனாக மாறி இருக்கலாம். ஒரே இடத்தில சோம்பேறியாக இருந்ததால் அவன் கடைசிவரை பிச்சைகாரனாக இருந்து விட்டான்.
நம்மில் பலர் அந்த பிச்சைக்காரன் போல் ஒரே இடத்தில இருந்து நம் திறமைகளை சரிவர பயன்படுத்தாமல் கடைசி வரை சாதாரண பணியாளனாக இருந்து விடுகிறோம். வாய்புகளை சரிவர பயன்படுத்தும் ஒருசிலரே பேர் சொல்லும் வகையில் கோடீஸ்வரனகவோ இல்லை சிறந்த தொழில் அதிபராகவோ ஏற்றம் காண்கிறனர். நம்மில் பலர் முயற்சியும் இல்லாமல் வரும் வாய்ப்புகளை பெரும்பாலும் நழுவ விடுகின்றனர். நானும் அந்த பலரில் ஒருவனாக ...
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment